புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நோய் தணிப்பு பராமரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் ஆதரவு

2024/3/13

இந்திரா புற்றுநோய் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அதிகாரி வைத்தியர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க அவர்களுடன் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் மானிய உதவிக்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தார். இந்த நிகழ்வு 2024 மார்ச் 13 ஆம் திகதி நடைபெற்றது.
 
மஹாரகம “சுவ அரண” நோய் தணிப்பு பராமரிப்பு நிலையத்தில் குணப்படுத்தும் பூங்காவை நிறுவுவதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் இந்திரா புற்றுநோய் நம்பிக்கை நிதியத்துக்கு 51,675 அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ. 16 மில்லியன்) வழங்கப்பட்டுள்ளது.


GGP திட்டத்தினூடாக 320 திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. 1989 ஆம் ஆண்டு முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 58.4 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.
 
ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி கொள்கையுடன் இந்தத் திட்டம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டதுடன், நபர்களுக்கு மகிழ்ச்சியாகவும், கண்ணியத்துடனும் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அவசியமான வலுவூட்டலினூடாக சமூக கட்டியெழுப்பலை மேற்கொள்வதனூடாக மனித பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படுகின்றதாக தெரிவித்தார். மேலும், இலங்கையின் நீண்ட கால உறுதித்தன்மைக்கும் சுபிட்சத்துக்கும் உதவிகளை வழங்கும் கொள்கையின் பிரகாரம் உதவிகளை வழங்க தம்மை அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்தார்.


இந்த உதவியை பெற்றுக் கொண்டமை தொடர்பில் வைத்தியர். லங்கா ஜயசூரிய திசாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்:
“எமது சிகிச்சை நிலையத்துக்கு ஜப்பானிய தூதரகம் வழங்கும் ஆதரவுக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். குழந்தைகளுக்கான நோய் குணமாக்கல் பராமரிப்புக்கு நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் இந்த திட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுவதுடன், எமது பராமரிப்பிலுள்ள இளம் நோயாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவியாக அமையும்.”

பாரதூரமான நோய் நிலைக்கு முகங்கொடுக்கும் சிறுவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக ஜப்பானிய தூதரகத்துடனான இந்த கைகோர்ப்பு அமைந்துள்ளது. எமது “சுவ அரண” சிறுவர் நோய் தணிப்பு நிலையத்தில் சிறந்த காட்சியம்சங்களுடனான சிகிச்சைப் பகுதியை உருவாக்குவதற்கு ஜப்பானிய தூதரகத்தின் மானிய உதவி பெரிதும் உதவியாக அமையும்.


இளம் நோயாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் சரணாலயப் பகுதியை வழங்கும் வகையில் இந்த வெளியக வசதி திட்டம் அமைந்திருக்கும் என்பதுடன், சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் அமைதியான இருப்பதற்கு அவர்களுக்கு இந்த சூழல் உதவியாக அமையும். வடிவமைப்பு செயன்முறை திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், சிறுவர் நோயாளர்களின் பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் இந்த பூங்காப் பகுதி அமைந்திருக்கும். இந்த குணப்படுத்தும் பூங்காவினால் சிறுவர் நோயாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் வாழ்க்கையில் நேர்த்தியான தாக்கம் ஏற்படுத்தும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இதனை செயற்படுத்த பக்கபலமாக அமைந்திருக்கும் ஜப்பானிய தூதரகத்துக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.”