ஜப்பானில் வேலை செய்ய ஒரு புதிய வாய்ப்பு - விசேஷட திறமையான தொழிலாளர்களுக்கான கட்டிட சுத்ததப்படுத்தல் துறை திறன் தேர்வு ஜூலை 2024 இல் தொடங்குகிறது

2024/5/29
குறிப்பிட்ட திறமையான பணியாளர்களாக ஜப்பானில் வேலை தேடுபவர்களுக்கு கட்டிடம் சுத்தம் செய்யும் துறையில் புதிய திறன் பரீட்சை 2024 ஜூலையில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஜப்பான் தூதரகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
 
2022 இல் இருந்து நடைமுறையில் உள்ள தாதி பராமரிப்பு, உணவு சேவை, விவசாயம், சமீபத்தில் சேர்க்கப்பட்ட கட்டுமானம், விமான நிலைய தரை கையாளுதல் மற்றும் தங்குமிடவிடுதி தொழில் ஆகியவற்றில் தற்போது திறன் தேர்வுகள இருக்கின்றன. கட்டிட சுத்ததப்படுத்தல் துறை உட்பட திறன் சோதனைகள் இலங்கையில் ஏழு துறைகளில் கிடைக்கும். மேலும், 2024 ஆம் ஆண்டு தொடங்கி ஐந்தாண்டு காலப்பகுதியில் 37,000 வெளிநாட்டு பணியாளர்களை வரவேற்கும் என மதிப்பிடப்பட்டுள்ள கட்டிடத் துப்புரவுப் பணியில் ஜப்பானில் பணிபுரியும் திறமையான இலங்கையர்கள் இந்த புதிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று ஜப்பான் தூதரகம் நம்புகிறது.
 
இலங்கையுடனான எமது நீண்டகால நட்பை மேலும் ஆழப்படுத்தி, இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஜப்பான் தூதரகம் தொடர்ந்து வழங்கும். இதன் பதிவு பற்றிய கூடுதல் தகவலுக்கு, சோதனைகளை நடத்தும் ஜப்பான் கட்டிட பராமரிப்பு சங்கத்தின் பின்வரும் இணையதளத்தைப் பார்க்கவும். திறன் தேர்வுக்கான விண்ணப்ப காலம் ஜூன் 5 முதல் 12 வரை இருக்கும்.
 
ஜப்பான் கட்டிட பராமரிப்பு சங்கத்தின் பின்வரும் இணையதளத்தைப் பார்வையிடவும். கட்டிடத்தை சுத்தம் செய்தல் பற்றிய அறிமுக வீடியோ (சிங்களம், ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் கிடைக்கிறது), பாடப்புத்தகம் (சிங்களம், ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் கிடைக்கிறது) மற்றும் நடைமுறை தேர்வுக்கான தயாரிப்பு வீடியோவும் இதில் உள்ளது.
 
https://www.j-bma.or.jp/examination/94334


- திறன் பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் 5 ஜூன் (காலை 6:30 மணி) - 12 ஜூன் (1:30 மணி) 2024 (இலங்கை நேரம்) வரை இருக்கும்.
- திறன் தேர்வு 2024 ஜூலை 16 முதல் 18 வரை இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் (SLFI) நடைபெறும்.
- தேர்வுக் கட்டணம் ரூ. 5,000. 
- திறன் தேர்வு விவரங்கள்: ஒரு தீர்ப்பு சோதனை (எழுத்துத் தேர்வு (paper test)) மற்றும் கட்டிடத்தை சுத்தம் செய்வதற்கான செயன்முறை சோதனை செயல்படுத்தப்படும். எழுத்துத் தேர்வு என்பது புகைப்படங்கள் மற்றும் விளக்கப்படங்களைப் பயன்படுத்தும் ஒரு தேர்வாகும். செயன்முறை தேர்வு மூன்று பணிகளை கொண்டுள்ளது. (பணி 1: தரை மேற்பரப்புகளை சுத்தம் செய்தல், பணி 2: கண்ணாடி மேற்பரப்புகளை சுத்தம் செய்தல், பணி 3: மேற்கத்திய பாணியிலா ன பெரிய சிறுநீர் கழிப்பறைகளை சுத்தம் செய்தல்).